முகப்பு தொடக்கம்

 
அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கிசாற்றல்
பிறைக்கோலஞ் செய்யு நுதுற்சூட் டணிகுவர் பெய்வளையால்
இறைக்கோலஞ் செய்வர் சினையா டுவரவ் விரதிதனைச்
சிறைக்கோலஞ் செய்யும் விழியார்தம் வெங்கைச் சிலம்பமதன்
நறைக்கோலஞ் செய்ய நறைக்கோலஞ் செய்வரென் னாட்டவரே.
(171)