முகப்பு தொடக்கம்

பிறவிமா மிடியன் றானெதிர் கண்ட
      பெறற்கரி தாயவைப் பென்ன
அறிவிலே னயன்மாற் கரியநின் றன்னை
      யம்மவோ வெளிதுகண் ணுற்றேன்
துறவினோ ருள்ளத் தெழுந்தொளி பரப்பித்
      தொல்லிருள் கடியுமெய்ச் சுடரே
இறைவிகூற் றுடையா யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(5)