முகப்பு
தொடக்கம்
புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர்
பூங்கணை மதனுமுன் பெறுநின்
சிரித்த வண் ணகையு நுதல்விழி நோக்குஞ்
சிறியனே னிருண்மலம் பெறுமோ
கருத்தினுங் கருத வரியநுண் ணியனென்
கடனற வுலகெலாங் காண்பான்
தரித்ததி தூல வடிவறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(7)