முகப்பு தொடக்கம்

புலம்பரி துயரங் கழன்றுநின் கழற்கால்
      புந்தியஞ் சினகரத் திருத்தி
நலம்புரி மனிதர் பேரவை தமியே
      னணுகுவா னருளுநா ளுளதோ
வலம்புரி மனிதர் கடலென வொலித்து
      வளைவுற நடுவண்மந் தரம்போல்
தலம்புரி தவத்தி னின்றொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(13)