முகப்பு தொடக்கம்

 
செவிலிநற்றாய்க்கு முன்னிலைமொழியாலறத்தொடுநிற்றல்
புலங்கண் டளவின் மறைவெங்கை வாணர் பொருப்பிடைச்செந்
நிலங்கண் டளவி லுறைதிரிந் தாங்கொர் நெடுந்தகைதன்
நலங்கண் டளவி னலந்திரிந் தாண்மென் னகின்மிசையோர்
கலங்கண் டளவின் மிகநோ மருங்குலுன் காரிகையே.
(307)