முகப்பு
தொடக்கம்
செவிலி தன்னறிவின்மை தன்னைநொந்துரைத்தல்
புன்றோ லுடையர் திருவெங்கை வாணர் பொருப்பணங்கு
வன்றோ ளிராம னொடுசீதை தங்கண் மனைகடந்து
சென்றோர் வனம்புகுந் தாளென்பர் மாசி றெரிவையர்க்கு
நன்றோ வதுபிழை தானோவென் றாளது நாடிலனே.
(331)