முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
புரந்தரனு மரியயனும் பரவுபரன்
       றிருவெங்கை புரமே யன்னாள்
இருந்தரள வடம்புரளு மிளமுலைக
       ணாடோறு மெழுந்து யர்ந்து
வருந்தமரை மலர்த்தாணூ லெனத்தினமுந்
       தேய்மருங்கை வருத்த நீருந்
திருந்துநெடுங் குழலிசைதல் வண்டினங்கா
       டகுதிகொலோ செப்பி டீரே.
(52)