முகப்பு தொடக்கம்

 
குரவரை வரைவெதிர்கொள்ளுவித்தல்
பூண்கொண்ட மென்முலை யாய்வெங்கை வாணர் பொதியவெற்பில்
ஏண்கொண்ட நங்கருத் தீன்றவர்க் கோது மிசைவுபெறா
நாண்கொண்டு நங்கற் பழிதனன் றோவன்றி நாணிழந்து
மாண்கொண்ட வங்கற் புறுதனன் றோநம் மரபினுக்கே.
(230)