முகப்பு தொடக்கம்

 
நேரிசை வெண்பா
பூவான் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவால்
மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் றண்டை
வெறித்தண் கமலமே வீடு.
(1)