முகப்பு தொடக்கம்

 
புகழ்தல்
பெண்காட் டியவொரு பங்குடை யாருதிர் பிட்டினுக்கா
மண்காட் டியபொன் முடியார் திருவெங்கை வாணர்வெற்பிற்
றண்காட் டியமலர்க் கோதாய் குரும்பைக டாமொருமுக்
கண்காட்டு மாயினு மொவ்வ நினதொரு கண்முலையே.
(184)