முகப்பு
தொடக்கம்
பெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண்
பேதையர்ப் புகழ்ந்தவந் திரிவேன்
பண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ
பயன்றர லறிந்துநிற் புகழேன்
கண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங்
கதிர்ணூ றாயிரங் கோடித்
தண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(27)