|
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
பெருகுறு மன்பாற் பூசனை புரிந்த பிணங்குநூற் சிலம்பிவெவ் வரவம் பிறைமருப் புரற்கால் யானையென் றிவற்றின் பிறவியோ விதழ்முறுக் கவிழ்ந்து முருகுமிழ் நறுமென் மலர்புனைந் துன்னை முற்றும்வந் தனைபுரி யாமன் முகிழ்முலை மகளிர் மயலிடை யழுந்து மூடர்தம் பிறவியோ நல்ல திரைபொருங் கங்கை யுவட்டெடுத் தொழுகுஞ் செஞ்சடை மிசையொரு துளிநீர் தெறித்தவர் தமையு நறவுகொப் பளிக்குஞ் செழுமலர்க் கற்பக வேந்தும் எரிபுரை யிதழ்ச்செங் கமலநான் முகனு மெய்தரும் பதத்தில்வைத் தருள்வோய் இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(1) |
|