முகப்பு தொடக்கம்

பெருமுடக் கானிமிர்ந் ததுகூ னிமிர்ந்தது
       பிணிகள்பல பலபோயின
பிடித்திருந் தெவரானு மகலாது துயர்செய்த
       பேயகன் றிட்டதம்மா
அருமகப் பெற்றுவந் தனமிடி யகன்றன
       மகிலம் புரக்கவருமோ
ரரசெய்தி னஞ்சென்று வென்றெய்து தற்குமிக
       வரியபகை வென்றெய்தினம்
வருமடக் கொடிமாதர் கண்வலைப் பட்டதுயர்
       மாற்றவற நெறிகண்டனம்
மலமாயை கருமங்க ணிலைகண்டி லோமென்னு
       மக்களொலி விண்ணளப்பத்
திருமடத் தரசிருந் தருள்செயருள் விழியாள
       செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
       செங்கீரை யாடியருளே.
(5)