முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
பெருமிழலைக் குறும்பரெனும் பரம யோகி
     பெரிதுவந்துன் றிருவடித்தா மரையைப் போற்றி
விரைமலர்தூய் வந்தனைசெய் கின்றா னென்றால்
     விளங்கிழையா ரிருவரொடு முயங்க லாமோ
உரைமதிநின் றனைவெறுப்ப தென்கொ னின்னை
     யுடையானுக் கடுத்தசெய லுனக்கு மாயிற்
சுரர்முனிவர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத்
     தொகைசெய்தோ யறமுதனால் வகைசெய் தோயே.
(39)