முகப்பு தொடக்கம்

 
இளமைத்தன்மைக் குளமெலிந்திரங்கல்
பேதைப் பருவ மிறந்தே பெதும்பைப் பிராயமுறும்
போதைத் தொடங்கி மருண்மாலை போல்பவள் போனதென்னோ
மாதைக் கலந்த விடத்தார் திருவெங்கை வாணர்வெற்பில்
கோதைச் செழுங்கதிர் வேல்வேந் தொடுமக் கொடுஞ்சுரமே.
(339)