முகப்பு தொடக்கம்

பைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற்
      பணிநறுந் துகில்புனை மடவார்
மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும்
      வினையினே னுய்யுநா ளுளதோ
செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான்
      றிருமுடி கடப்பினு மூவர்
தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(67)