|
பைந்தா துகுக்கு நறுங்கொன்றைப் பனிமா மலருங் குழவியிளம் பயில்வெண் மதியுந் துளையெயிற்றுப் பாம்புஞ் சுமக்கு மன்றுநீ செந்தா மரைச்சே வடிநோவத் திரும்பித் திரும்பி யோரிரவிற் சேல்வென் றகன்ற வரிமதர்க்கட் சிலைக்கூன் புருவத் தரளநகை நந்தா விளக்கின் றிருமனைக்கு நாவ னகரின் வன்றொண்டர் நடத்த வொருதூ தாளாகி நடந்த வுனக்கின் றடியேம்பால் வந்தால் வருமோர் பழியுண்டோ மதுரக் கனியே வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(3) |
|