|
பையரவின் வெவ்விடப் பகுவாயி னிடைசென்று பட்டுனைப் போலநைந்து பாதியுமை பங்கனை யிகழ்ந்தவவன் வேள்வியிற் பல்லொழிந் துழலுமந்த வெய்யவன் றனையடைந் தென்பயன் மெய்குன்றி விரையவிங் கெய்தவரினீ விரிசிறைய வாரணச் சினையென்ன வேநின்னை மிசையவரு பைங்கணரவம் உய்யலற வோர்நிலச் சுமையரவை வாயலகி னோடிக் கவர்ந்தெடுத்தே யுதறுமொரு தோகைமயி றனையேவ வேதனுக் கொருதுணைவ னாயமுருகற் கையணிவ னுரைசெய்வ னாதலா லுளமகிழ்ந் தம்புலீ யாடவாவே யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே.
|
(2) |
|