முகப்பு
தொடக்கம்
பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து
புண்ணியர்க் கருளுநின் பதங்கள்
என்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ
லெய்திய தம்மவோ வியப்பே
மன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி
மலைதரு மருட்பெருங் கடலைத்
தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(89)