முகப்பு
தொடக்கம்
இரவுக்குறி
இறையோ னிருட்குறிவேண்டல்
பொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு
மருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையனையீர்
திருந்தார் கலியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு
விருந்தாக வைத்தகன் றானளி யேனையவ் வெய்யவனே.
(166)