முகப்பு
தொடக்கம்
இறைவன்மேற்பாங்கி குறிபிழைப்பேற்றல்
பொருவோ விலர்திரு வெங்கையி லேமுன் புனத்திலெமை
உருவோ டுயிரமு தென்றுபொய் கூறி யுழன்றவரே
வெருவோ மிரவும் பழியுமும் மூர்க்க வினவிவழி
வருவோம் வரினு மெமைநோக்கு றீரென வந்திலமே.
(200)