முகப்பு தொடக்கம்

 
தலைவியிரங்கல்
பொழியு மருளுடை யார்வெங்கை வாணர் பொருப்பருவி
விழியு மெலிவும் பசப்பூர் முலையுமவ் வின்மதனால்
அழியு மனமு நினைந்தில ராயினு மாவொருபெண்
பழியு நினைந்தில ரேபொருண் மேற்சென்ற பாதகரே.
(267)