முகப்பு
தொடக்கம்
வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல்
பொன்னா ரிதழித் தொடையாளர் வெங்கைப் பொருப்பிலிந்த
நன்னா ளினிவருங் காலத் துறாதென நன்மணஞ்செய்
தன்னாய் வருகின் றனர்மட மாதுட னன்பரென்று
சொன்னார் மொழிபிற ழாதுண்மை கூறுநற் றூதுவரே.
(359)