முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பொன்செய்வா ணிகர்போ லெவ்வழி யானும்
      புண்ணிய மீட்டினு மறிஞர்
கொன்செய்பா தகமே புரிந்தன னின்றாள்
      குறுகுவ தென்றென விரங்க
முன்செய்தீ வினையோ கனவிலு மறமே
      மொழிகிலேன் களித்திருக் கின்றேன்
என்செய்கோ மறலிக் கென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(1)