முகப்பு
தொடக்கம்
இறையோ னிறைவி தன்மையியம்பல்
போதே முகமிளஞ் சேலே விழிபசும் பொன்னுரைத்த
சூதே முலைசெந் தளிரே யடிகதிர்ச் சோதியொடு
வாதே புரியுந் திருமே னியர்வெங்கை மங்கையர்க்கு
மாதே யிடையொன்று மல்லாமற் பொய்யல்ல மற்றவையே.
(88)