முகப்பு தொடக்கம்

 
பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல்
போரையும் வேளையு மாற்றிதன் வெங்கையிற் போதக்கண்டேன்
வாரையுங் கீள்பெருங் கொங்கையின் மேன்மனம் வைத்திருண்ட
காரையுஞ் சீறு மலர்க்குழ லாய்கரி யுங்கிரியும்
பேரையுஞ் சீரையுங் கேட்டுமுன் போந்த பெருந்தகையே.
(122)