முகப்பு தொடக்கம்

 
தலைவி யிளவேனிற்பருவங்கண்டு வருந்தல்
போதந் திறைப்ப வழறென்றல் பற்றுதல் போலவிளஞ்
சூதந் தழைக்குமிந் நாள்கண்டி லார்கொ றுணிவொடுநால்
வேதந் துதிக்குந் தனிமூல காரணர் வெங்கைவெற்பில்
பாதஞ் சிவக்கப் பொருள்வயிற் போயின பாதகரே.
(422)