முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
போத முண்ட பிள்ளை யென்பு
     பொருகண் மாது செய்ததோ
காதல் கொண்டு சொல்லின் மன்னர்
     கன்மி தப்ப வுய்த்ததோ
வாய்தி றந்து முதலை கக்க
     மகனை நீய ழைத்ததோ
யாது நம்பி யரிது நன்றெ
     னக்கி யம்ப வேண்டுமே.
(19)