முகப்பு
தொடக்கம்
தகையணங்குறுத்தல்
பண்ணூடு மின்சொ லுமைபாகர் வெங்கைப் பனிவரைமேல்
விண்ணூ டிழிந்து வருந்தெய்வ மாது விளங்குறுமென்
கண்ணூ டிருந்தபெண் ணின்னீழ லாகக் கருத்திடைநீ
எண்ணூ டிருந்துக வேலிவ டானெங்க ளேந்திழையே.
(70)