முகப்பு தொடக்கம்

 
இரவுக்குறி
இறையோ னிருட்குறிவேண்டல்
பொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு
மருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையனையீர்
திருந்தார் கலியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு
விருந்தாக வைத்தகன் றானளி யேனையவ் வெய்யவனே.
(166)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
இறையோனெறியின தெளிமைகூறல்
பங்கந் தனக்கிலன் வெங்கையி லேநும் பணைமுலைமா
தங்கந் தனக்குமம் மாதங்க பாரந் தரிக்குமிடைச்
சிங்கந் தனக்குத் தளர்வதல் லாமற் சினவிலங்கின்
சங்கந் தனக்கொரு நானோ தளர்குவன் றாழ்குழலே,
(168)