முகப்பு
தொடக்கம்
புலர்ந்தபின் வறுங்களந் தலைவி கண்டிரங்கல்
பணஞ்செய் பொறியிள நாகா பரணர் பகைதடிந்து
நிணஞ்செய் சுடர்மழு வெங்கைபு ரேசர் நெடுஞ்சிலம்பிற்
குணஞ்செய் கதிரிலை வேலன்பர் தாங்குளிர் மாலையிட்டு
மணஞ்செய் தனரென வோதழைந் தாய்மலர் மாதவியே.
(197)