முகப்பு தொடக்கம்

 
தலைவியுணர்ந்து தலைவனொடுபுலத்தல்
பண்கா ணுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய்
கண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள
பெண்கா ணெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத்
துண்கால மென்முலை நுண்ணிடை காறு முறையென்றதே.
(394)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
தலைவிபாணனைமறுத்தல்
பைத்தலை நாக மணிவோன்றென் வெங்கைப் பனிவரைமேல்
செய்த்தலை யூர னுனையீங்கு விட்டது தேரினொரு
மெய்த்தலை நீட்டி நுழைவான் கருதிமுன் வெங்கரவன்
பொய்த்தலை காட்டிய தன்றோபண் பாடும் புலைமகனே.
(395)