|
பழித்த வுலக முயிராதி பகவ னெனப்பே தித்தென்றும் பாழ்செய் மூல மலவிருளைப் பதத்தா லழிக்குஞ் செயலன்றிச் சுழித்த கடலி லரவணையிற் றுயில்வோ னளித்த மலரயனாற் றோன்று முலக மழித்திடுமத் தொழிலும் புகழ்செய் யாததெனின் இழித்த புன்சொற் புன்புலவ ரிசைத்துத் தாமே யழித்தலுறும் யாப்பே போல விழைத்தளவில் யாமே யழித்து விடுமிதனை அழித்த னினக்குப் புகழ்தருமோ வடியேஞ் சிற்றி லழியேலே யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
|
(3) |
|