முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பகலாவெழுத் தைந்தேவடி வாகுஞ்சிவ ஞானி
       பாற்போகுவ னென்றேநினை வுற்றேனது பொழுதே
புகலாசையி ரும்பேயினிப் போவேனெனப் போய்த்தாற்
       புணர்மூலம லப்பேயவற் கண்டேகுவ னென்றே
அகலாமைய கன்றேயக லாநின்றது மெல்ல
       வாகத்தின்வி னைப்பேயவற் கண்டுஞ்சில நாணான்
இகலாமையி ருந்தேகுவ னென நின்றது மாயை
       யெனும்பேயத னோடேகுவ னெனநைந்ததி ரந்தே.
(77)