முகப்பு தொடக்கம்

 
நேரிசை யாசிரியப்பா
பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்
பேரருள் பெற்றும் பெறாரி னழுங்கி
நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே
பேயேன் பெறாது பெற்றார் போலக்
களிகூர்ந் துள்ளக் கவலைதீர்ந் தேனே
அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை
வாதவூ ரன்ப வாத லாலே
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலரெனுஞ்
செஞ்சொற் பொருளின் றேற்றறிந் தேனே.
(28)