முகப்பு தொடக்கம்

புரிசடைக் காட்டு ளாடவிட் டிளவம்
      புலியினைச் சிறப்புலி யொடுகோட்
புலிதொழ விருக்கு மொருபெருந்
      தெய்வப் புலிபனி மலையிளமானைப்
பரிவுறத் தொழுது மருவிய வதனாற்
      பயமறச் சாதிக டனது
பாங்கர்வந் தெய்தப் பெற்றதென் றறிந்து
      பசுவெலா மருவுறப் பெறுமே
சுரிகுழற் கயற்கட் பிறைநுதற் கனிவாய்த்
      துடியிடைக் குவிமுலைத் தளிர்க்கைத்
துணைவிமுற் கங்கை பெயர்சொலக் கூசுஞ்
      சுடர்மணிக் கட்செவிப் பணியான்
கிரிமகட் கெடுத்தக் கறைமிடற் றிறைவன்
      கிளக்குமெற் புகழெனத் தோன்றிக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(10)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

பண்டுநின் கொழுநன் றந்தையுந் தாயும்
      பயந்ததம் மருமருந் தன்ன
பாலனைக் கொன்று சமைத்திடக் கொள்ளும்
      பாதக மொன்றுளங் கொண்டு
தொண்டர்தம் மனையிற் செல்வனென் றெழநின்
      சுதனழப் பொறாதுநின் முலைப்பால்
சுரந்தமு தூட்டு மன்னைநீ யாவாய்
      தொழுதுபோய்ப் பிரித்திலை யென்னோ
அண்டர்தங் கங்கை யன்னமங் கதன்க
      ணாடல வாகிவந் தடையா
வாடியிங் கிதன்க ணமர்வுறப் பெறலா
      லடைந்துவான் கங்கையை யிகழ்ந்து
கெண்டையொண் வாளை யுடனெழக் குதிப்பக்
      கிளைவளைக் கமுகின்மேற் றவழக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(9)