முகப்பு தொடக்கம்

 
புணர்ச்சியின் மகிழ்தல்
மற்றின்ப முண்டென்ப தன்றா லிவடர வந்தவின்பஞ்
சிற்றின்ப மென்பது தென்வெங்கை வாணர் திருநடனம்
உற்றின்பஞ் செய்யுஞ் சிதாகாசந் தன்னை யுணர்வுடைமை
பெற்றின்ப மெய்தினர் சொல்வர்சிற் றம்பலப் பேர்புனைந்தே.
(137)