முகப்பு
தொடக்கம்
பாங்கிமதியினவரவர் மனக்கருத்துணர்தல்
மான்வேட்ட மீதும் புனங்காவன் மீதினும் வைத்தமனந்
தான்வேட்ட காதன் மறைப்பவெல் லாமயன் றாதையொடு
நான்வேட்ட செம்மலர்த் தாளான் றிருவெங்கை நாட்டிலிவர்
தேன்வேட்ட பூங்கண்க ளேயலர் தூற்றித் தெரிவிக்குமே.
(83)