முகப்பு
தொடக்கம்
பாங்கி பேதைமையூட்டல்
மானைக் கவர்வம் மழுவிலை யேல்வெங்கை வாணர்க்கந்த
வானைப் புணர்மதி கீள்வே மகப்படின் மானுக்கென்னுஞ்
சேனைக் குறவர் மகளா கியவித் திருந்திழையாள்
ஆனைத் திறலுடை யாயறி யாளுன் னருந்துயரே.
(93)