முகப்பு
தொடக்கம்
குறியிடத்துய்த்து நீங்கல்
மானேநின் கண்ணிகல் பெற்றுள வாவி மருவலரை
யானே யளியினம் பின்றொடர்ந் தார்ப்பக்கொண் டிங்குறுவேன்
ஆனே றுடையர் திருவெங்கை வாண ரருண்முருகன்
தானே முறுமயி லாடல்கண் டேநிற்க தண்பொழிற்கே.
(135)