முகப்பு
தொடக்கம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மாறா மலமொன் பதுவாயும் வழியு முடலை யுடலமிக
நாறா வகைநன் மணந்திமிரு நடலைக் கபட மாதர்தமைப்
பேறா நினைந்து கடலமுதே பிணையே மயிலே யெனப்பிதற்றித்
தேறா வெனையுந் தனைத்துதிக்கச் செயுமோ வெங்கைச் சிவன்றானே.
(59)