முகப்பு தொடக்கம்

 
வரவுணர்பாங்கி தலைவிக்குணர்த்தல்
மின்னா கியசெஞ் சடையார் திருவெங்கை வெற்பிலுனை
உன்னா தகன்றவர் வந்தா ரவர்செய லுன்னலைநீ
இன்னாசெய் தாரை யொறுத்திடி னன்மை யியற்றுகெனச்
சொன்னார் புலவ ரறிந்திலை யோபொற் சுடர்த்தொடியே.
(387)