முகப்பு
தொடக்கம்
மின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும்
விளங்கொளி மார்பும்வா னுலக
மன்வணங் குறுநின் பதாம்புய மலரு
மனங்குடி யிருக்குநா ளுளதோ
பொன்வணம் புரியும் காகமொன் றினைப்பொற்
பொருப்பென வடைபொரு ளனைத்துந்
தன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(94)