முகப்பு
தொடக்கம்
இறைவியையெய்திப் பாங்கிகையுறைகாட்டல்
முட்டுப் படாத திருவாளன் வெங்கை முளரிமுகை
நட்டுப் படாத விளமுலை யாயுன் னகையுடனே
மட்டுப் படாம லிகலுந் தளவின்று மட்டுப்பட்டுக்
கட்டுப் படாமலென் கைக்கேவந் துற்றது கண்டருளே.
(187)