முகப்பு தொடக்கம்

முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர
      முலைமுகட் டணிபெற மலராள்
பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற்
      பாவையர்க் கிரங்கிடா தருளாய்
அகவிளக் கென்ன வகறிரி நெய்தீ
      யாக்குவோ ரின்றியே யெழுந்த
சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(54)