முகப்பு தொடக்கம்

முதையா மெமது மனப்புலத்தை
       மூடுங் காம வெகுளிவன
முற்றுங் கருணைத் தீக்கொளுவி
       முருக்கித் திருத்திச் செருக்கெனுமா
மதயா னையைவந் தழியாது
       மறிப்பப் பொறைவே லியுமமைத்து
வலியா சிவமந் திரப்படையால்
       வாய்ப்ப வுழுது சிவவிதையை
விதையா முளைப்பப் பிறதெய்வ
       விரவு களைகட் டறவளர்த்து
வீடாங் கனிகொள் பருவத்து
       விடயக் கரவர் புகுந்ததனைச்
சிதையா வண்ணங் காத்தளிக்குந்
       திறத்தாய் தாலோ தாலேலோ
தேடற் கரிய சிவஞான
       தேவே தாலோ தாலேலோ.
(4)