|
மும்மைமல முங்கதிர்க் கற்றைவட் டப்பரிதி முன்னிருள்செய் தீரமதியின் முழுநில வெறிக்கும்வெண் டிருநீறு ஞானமெனு மொய்குழலை மன்றல்புரிவார் எம்மணிய தென்றுபுனை நன்முகக் கண்டியுட னிறைவனரு ளஞ்செழுத்து மிலிங்காங்க சங்கசம ரசநிலைமை யிதுவென்ன விருளறவுணர்த்து குருவும் மெய்ம்மையுணர் வொடுகலந் துற்றிருந் தங்கையில் வெளிப்பட்ட ஞானவடிவும் விளங்குசர மும்புனித தீர்த்தசிவ சேடமும் மேலுலக வித்தென்றவை தம்மையுல கினில்விளக் கியவந்த தேசிகா சப்பாணி கொட்டியருளே, தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே.
|
(4) |
|