முகப்பு தொடக்கம்

முருந்தேர் நகையார் மயறுரக்கு முத்தே வருக பிறவிவன
       முரிக்குங் கருணைக் கடாக்களிறே முன்செய் தவத்தோர் தமக்குவரு
விருந்தே வருக தூண்டுசுடர் விளக்கே வருக சோதிமணி
       விழியே வருக பரமுணர்ந்து விளைக்குந் தவத்தோர் பானிறைய
இருந்தே கமழுந் தீங்கனியே யிறையே வருக புகழ்நிலா
       வெறிக்கு மறுவின் மதியமே யெமையா ளுடையாய் வருகவரு
மருந்தே வருக பெருங்கருணை வடிவே வருக வருகவே
       மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
(4)