முகப்பு தொடக்கம்

 
வேறு
முட்டு மார்புல னாய சேனைகண் முறியமான்
       முற்று நானெனும் வேழ மாய்வுற மனமென்மா
பட்டு வீழ்தர வாவி யாமர சுடையவே
       பற்றி ஞானநல் வாளி னாலொரு தமியனாய்
வெட்டு பாணிய னான லாலய லிலையெனா
       வெற்றி யாலறி வாகு மோர்நக ரிமையுளே
கட்டு மாறெதிர் மாறில் சேவகன் வருகவே
       கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.
(9)