முகப்பு தொடக்கம்

மெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும்
      விளங்குமா கமவுணர்ச் சியினும்
புத்தலர் கொடுநிற் பரவுபூ சையினும்
      பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய்
முத்தமு மரவ மணிகளு மெறிந்து
      முதிர்தினைப் புனத்தெயின் மடவார்
தத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(29)